ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் பாஜக -குமாரசாமி
#Karnataka #Political #Situation #CaptainNews | #TamilNews
கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டத்தில் பாஜக முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் எம்ஏல்ஏக்கள் ராஜினாமா, உச்ச நீதிமன்ற உத்தரவு என்று அடுத்தடுத்து அரசியல் பரபரப்புகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனையடுத்து ஆளும் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்காக கர்நாடக சட்டப்பேரவை வியாழன் அன்று கூடியது.
தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது என்றார். ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார். ஆனால் அவை ஒத்திவைக்கப்பட்டாலும் எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் பேரவையிலேயே விடிய, விடிய உள்ளிருப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அவை இன்று மீண்டும் கூடியது. இதில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2-வது நாளாக உரையாற்றிய முதலமைச்சர் குமாரசாமி, தான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்தார். அனைத்து சதி வேலைகளையும் நிறைவேற்றி விட்டு எதுவும் தெரியாதது போல் எடியூரப்பா அமர்ந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து பிற்பகல் ஒன்றரை மணியளவில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கர்நாடகத்தில் கடந்த இரு வாரங்களாக நிகழ்ந்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் பாஜக -குமாரசாமி video phone beyonce mp3 | |
| 3 Likes | 3 Dislikes |
| 90 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 19 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét