பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை- உச்ச நீதிமன்றம் உத்தரவு
#CaptainNews | #TamilNews
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள்நடத்தி முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், விசாரணை இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து வழக்கை விரைவாக நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றமும் கடந்த 2017 முதல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.
இதையடுத்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் பணிக்காலத்தை மேலும் 9 மாதங்கள் நீட்டித்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அதற்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net
பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை- உச்ச நீதிமன்றம் உத்தரவு camera iphone 8 plus apk | |
| 3 Likes | 3 Dislikes |
| 121 views views | 133K followers |
| News & Politics | Upload TimePublished on 19 Jul 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét